×

பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ்

சேலம், ஜன.9: சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்தவர் வளர்மதி(62).இவர் நேற்று 5ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். அங்கு சிகிச்சை முடிந்ததும், 5ரோட்டில் இருந்து தனியார் பஸ்சில் சென்றார். எஸ்.கொல்லபட்டி வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் தனக்கு பின்னால் இருந்த 2பெண்கள் நகையை திருடியது தெரிந்தது. உடனே வளர்மதி இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகினறனர்.

The post பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Salem ,Varamathi ,Salem Irumpalai ,S. Kollapatti ,road ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...